எனது பாரதரத்னா விருது என் தாய் மற்றும் இந்தியத் தாய்களுக்கு சமர்ப்பணம்: சச்சின் உருக்கம்
டெல்லி: இந்தியா எனும் அழகிய நாட்டில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப் படுகிறேன். எனது இந்த உயரிய விருதை எனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
40 வயதான டெண்டுல்கர் சுமார் 200 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒருநாள் போட்டிகளிலும், 20 ஓவர் போட்டியில் ஒரு ஆட்டமும் சேர்த்து மொத்தம் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின். ‘கிரிக்கெட் கடவுள்' என ரசிகர்களால் போற்றப் பட்ட சச்சினுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சச்சின் கூறியதாவது :-

தாய்க்கு சமர்ப்பணம்....
பாரத ரத்னா விருதை எனது தாயாருக்கும், இந்தியாவின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

தியாகிகளாகும் பெற்றோர்....
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும், தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக பெரும் தியாகம் செய்கின்றனர்.

தொடர்ந்து விளையாடுவேன்....
கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப் பூர்வமாக ஓய்வு பெற்றபோதும், எனது ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து விளையாடுவேன்.

நன்றி.. நன்றி.. நன்றி...
இந்திய தேசத்தில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த உயரிய விருதினை நான் பெற வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

வாழ்த்துக்கள்...
மேலும், பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர். ராவுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாவதற்கு முன்னோடியாக ராவ் திகழ்கிறார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெருமை....
இதன்மூலம் பாரதரத்னா விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும், மிகக் குறைந்த வயதில் இந்த விருதினைப் பெறுபவர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications