இன்றைய தர்ணாவில் பங்கேற்றால் கடும் விளைவுகள்... ஊழியர்களுக்கு மத்திய அரசு 'வார்னிங்'
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் இன்றைய தர்ணா போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றால் கடும் விளைவுகள் ஏற்பௌட்ம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
7வது ஊதியக் குழு அறிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அருகே இன்று தர்ணா போராட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் மத்திய அரசு, இந்த தர்ணா போராட்டத்தில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு ஊழியர்களும் வியாழக்கிழமையன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும். அப்படி வராத ஊழியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஊதியமும் பிடித்தம் செய்யப்படும்.
வியாழக்கிழமையன்று யாருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது; அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அதிகாரம் இல்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை ஏற்கெனவே இயங்கி வரும் கூட்டு ஆலோசனைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications