2 சிஷ்யைகளை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 சாமியார்கள்.. உ.பி. ஆசிரமத்தில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் லக்னோவில் நடந்து இருக்கிறது.
இந்த சாமியார்கள் நான்கு பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் 10 நாட்களாக அந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
தற்போது போலீசார் இந்த நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்கள் தற்போது போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போலி சாமியார்கள்
லக்னோவில் இருக்கும் 'பாஸ்தி' மாவட்டத்தில் நான்கு சாமியார்கள் ஒன்றாக சேர்ந்த ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். 'பிரஜானந்த், சச்சிதானந்த், பிராச்சேநானந்த் , விசுவானந்த்' ஆகிய நான்கு சாமியார்களும் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளனர். இங்கு நிறைய பெண்கள் சிஷ்யைகளாக பணியாற்றி வந்துள்ளனர்.

தொல்லை
இந்த ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் கடந்த 2008ம் ஆண்டு சேர்ந்துள்ளனர். சேர்ந்த புதிதில் அந்த சாமியார்கள் நான்கு பேரும் மிகவும் நன்றாகவே பழகி இருக்கிறார்கள். ஆனால் போக போக அவர்களின் செயல்பாடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் பாலியல் ரீதியாக கடந்த 1 வருடமாக சிறு சிறு தொல்லைகள் கொடுத்துள்ளனர்.

கூட்டாக வன்புணர்வு
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பெண்களையும் நான்கு சாமியாரும் சேர்ந்த ஆசிரம அறை ஒன்றில் அடைந்து வைத்துள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களாக இந்த சாமியார்கள் சேர்ந்து இரண்டு பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் மோசமாக கொடுமையும் படுத்தி இறுகின்றனர். பூட்டிய அறையை 10 நாட்களாக திறக்காமலே இருந்துள்ளனர்.

புகார்
நேற்று இரவு இந்த இரண்டு பெண்களும் கஷ்டப்பட்டு அங்கு இருந்து தப்பித்துள்ளனர். தற்போது இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அந்த நான்கு போலிச் சாமியார்களையும் தேடி வருகின்றனர். போலீசுக்கு தகவல் சென்றதும் அந்த நான்கு பேரும் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications