2 சிஷ்யைகளை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 சாமியார்கள்.. உ.பி. ஆசிரமத்தில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 2 சிஷ்யைகள் 4 சாமியார்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் லக்னோவில் நடந்து இருக்கிறது.
இந்த சாமியார்கள் நான்கு பேரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் 10 நாட்களாக அந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
தற்போது போலீசார் இந்த நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்கள் தற்போது போலீஸ் பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போலி சாமியார்கள்
லக்னோவில் இருக்கும் 'பாஸ்தி' மாவட்டத்தில் நான்கு சாமியார்கள் ஒன்றாக சேர்ந்த ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். 'பிரஜானந்த், சச்சிதானந்த், பிராச்சேநானந்த் , விசுவானந்த்' ஆகிய நான்கு சாமியார்களும் அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளனர். இங்கு நிறைய பெண்கள் சிஷ்யைகளாக பணியாற்றி வந்துள்ளனர்.

தொல்லை
இந்த ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் கடந்த 2008ம் ஆண்டு சேர்ந்துள்ளனர். சேர்ந்த புதிதில் அந்த சாமியார்கள் நான்கு பேரும் மிகவும் நன்றாகவே பழகி இருக்கிறார்கள். ஆனால் போக போக அவர்களின் செயல்பாடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் பாலியல் ரீதியாக கடந்த 1 வருடமாக சிறு சிறு தொல்லைகள் கொடுத்துள்ளனர்.

கூட்டாக வன்புணர்வு
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பெண்களையும் நான்கு சாமியாரும் சேர்ந்த ஆசிரம அறை ஒன்றில் அடைந்து வைத்துள்ளனர். அங்கு கடந்த பத்து நாட்களாக இந்த சாமியார்கள் சேர்ந்து இரண்டு பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் மோசமாக கொடுமையும் படுத்தி இறுகின்றனர். பூட்டிய அறையை 10 நாட்களாக திறக்காமலே இருந்துள்ளனர்.

புகார்
நேற்று இரவு இந்த இரண்டு பெண்களும் கஷ்டப்பட்டு அங்கு இருந்து தப்பித்துள்ளனர். தற்போது இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அந்த நான்கு போலிச் சாமியார்களையும் தேடி வருகின்றனர். போலீசுக்கு தகவல் சென்றதும் அந்த நான்கு பேரும் தலைமறைவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications