ஜெயலலிதா விடுதலைக்காக அரண்முலா கோவிலில் விருந்துக்கு 'புக்' செய்த ரசிகர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அதிமுக அபிமானி ஒருவர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி கேரளாவில் உள்ள பிரபல ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் நடக்கும் வருடாந்திர வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அரண்முலாவில் உள்ளது பிரபல ஸ்ரீ பார்த்தசாரதி கோவில். அந்த கோவிலில் வல்லசாத்யா என்ற திருவிழா கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்தின்போது படகுப் போட்டி நடத்தப்படும். படகுப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவிலில் பிரமாண்ட விருந்து நடைபெறும். அந்த விருந்தில் பல வகை உணவு பரிமாறப்படும்.

இந்த வல்லசாத்யா விருந்து கேரளாவில் மிகவும் பிரபலம்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள வல்லசாத்யா விருந்துக்கு ஜெயலலிதா பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை

விடுதலை

ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி அதிமுக அபிமானியான சென்னையைச் சேர்ந்த மலையாளி ஒருவர் தான் அம்மாவின் பெயரில் வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்துள்ளதாக கோவில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்து

விருந்து

வல்லசாத்யா விருந்துக்கு முன்பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் ஆகும் என்று அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் பள்ளியோட சேவ சங்கத்தின் செயலாளர் ரதீஷ் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.

முதல் முறை

முதல் முறை

திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் வல்லசாத்யா விருந்து அளித்துள்ளனர். ஆனால் வெளிமாநில அரசியல் தலைவரின் பெயரில் விருந்து நடக்க உள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+