சுதந்திர தினம்... பிரதமர் மோடி அணிந்த தலைப்பாகை... ரகசியம் உடைந்தது!!
டாபி: ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடியின் பேச்சு எதை மையமாக வைத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் இருக்கும். அதேபோல், அவர் தலையில் அணிந்து இருக்கும் தலைப்பாகையும் மக்களின் கவனத்தை ஈர்க்கும். எந்த நிறத்தில் இருக்கும், எந்த மாதிரியான செய்தியை மக்களுக்கு அனுப்புகிறது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கும்.
Recommended Video
நடப்பாண்டில் அவர் அணிந்து இருந்த தலைப்பாகை ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. இந்த தலைப்பாகையை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அனுப்பி வைத்து இருக்கும் செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுஜன்சிங் பார்மர். வயது 38. இதுகுறித்து அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் சிஆர் பாட்டில் அளித்திருக்கும் பேட்டியில், ''சுதந்திர தினத்தன்று தான் கொடுக்கும் தலைப்பாகையை பிரதமர் அணிய வேண்டும் என்பது சுஜன்சிங்கின் விருப்பம். சுஜன்சிங்கிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆறு தலைப்பாகைகள் பிரதமருக்கு தயாரிக்க இருப்பதாகவும், அவற்றை பிரதமருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார். இதன்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கு ஆறு தலைப்பாகை அனுப்பி வைக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகன்சிங் கூறுகையில், ''குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறேன். டாபி மாவட்டத்தில் இருக்கும் சொங்கத் தாலுகாவுக்கு வந்தபோது சந்தித்தேன். அப்போது அவருக்கு தலைப்பாகை கொடுத்தேன். ஆனால், அதை அப்போது அவர் அணியவில்லை. ஆனால், இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி. நான் கொடுத்திருந்த தலைப்பாகையை சுதந்திர தினத்தன்று அணிந்து இருந்தார். இதேபோல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் தலைப்பாகை கொடுத்து இருக்கிறேன். அவர்களும் அதை அணிந்து இருக்கிறார்கள்'' என்றார்.
விவசாயியாக இருந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக ராஜ்புட் சமுதாயத்திற்காக சுஜன்சிங் தலைப்பாகை தயாரித்து வருகிறார். 18 விநாடியில் ஒரு தலைப்பாகை தயாரித்து விடுவாராம். விவசாயி என்ற வகையில் அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரது தலைப்பாகையை பிரதமர் இந்த முறை அணிந்து இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications