விவசாயிகள் பிரச்சினைக்காக கர்நாடகாவில் இன்று பந்த்! இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று நடைபெற்றுவரும் பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

கர்நாடகா மாநிலத்திற்க்கும் கோவா மாநிலத்திற்கும் நடுவே கலசா பண்டூரி என்ற நதி இணைப்பு திட்டத்தை கர்நாடகா அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கோவா மாநிலம் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதனை கர்நாடக விவசாயிகள் சங்கம் கண்டித்து வருகிறது.

Farmers' Association Calls for Karnataka Bandh on Saturday

கர்நாடகாவில் சமீப காலமாக விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்துவருகிறது. இதை தடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகம் தழுவிய பந்த்துக்கு இன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பந்த் காரணமாக, தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால், பெங்களூர் வரும் பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால் பெங்களூரில் பந்த்துக்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

ஆனால், மைசூர், மண்டியா போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து பெங்களூருக்கு படிப்படியாக தமிழக பஸ்கள் இயக்கப்பட தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+