காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்துக்கு தூண்டினார் பரூக் அப்துல்லா:- மத்திய அரசு பரபர புகார்!
Recommended Video
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுதமேந்திர போராட இளைஞர்களை தூண்டியதால் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவ் 370ஐ மத்திய அரசு நீக்கியது. முன்னதாக அம்மாநில அரசியல் தலைவர்களான பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இத்தலைவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் தற்போதைய லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது பதிலளித்த மத்திய அரசு, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், பரூக் அப்துல்லா மீது மொத்தம் 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வன்முறைக்கு தூண்டினார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. மேலும் ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி போராடிய போராளிகளின் தியாகம் வீணாகாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.
புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது இந்திய அரசுதானே தவிர பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்றும் பொதுக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்று தனிநாடாக காஷ்மீர் உருவாக மிகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பேரணி ஒன்றில் பேசினர் பரூக் அப்துல்லா; இளைஞர்களை தனிநாடு கோரிக்கைக்காக ஆயுதமேந்தி போராடவும் தூண்டினார் என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன
இதனையடுத்தே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் தனி அறை ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதர அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று வருவோரைத் தவிர மற்றவர்கள் பரூக் அப்துல்லாவை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications