10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 23 குழந்தைகளின் தந்தை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 23 குழந்தைகளின் தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னட மாவட்டத்தில் உள்ள விட்டல் அருகே உள்ள சாலித்தூரைச் சேர்ந்தவர் ரஜப்(53). அவருக்கு 4 மனைவிகளும், 23 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஜப் கடந்த 23ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Father of 23 children accused of raping minor

இது குறித்து சிறுமியின் தாய் விட்டல் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ரஜப் என் மகளிடம் நைசாகப் பேசி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தனது கணவர் ஊரில் இல்லாததால் தான் புகார் அளிக்க தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரஜபை தேடி வருகிறார்கள்.

சிறுமியை பலாத்காரம் செய்த நபரை உடனே கைது செய்ய இந்து அமைப்பு ஒன்று போலீசாரை வலியுறுத்தியுள்ளது. போலீசார் விட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ரஜபை தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+