Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த ஊரூக்குச் செல்ல ரூ. 2000 தர மறுப்பு... மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டாயிரம் ரூபாய் பணம் தர மறுத்த மகனை தந்தையே சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் சம்சுல்(50). இவரது மகன் பிரோஸ். பெட்டிக்கடை நடத்தி வரும் சம்சுல், கடந்தவாரம் பீகாரில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியுள்ளார். இதற்காக தனது மகனிடம் அவர் ரூ. 2000 பணம் செலவிற்கு கேட்டுள்ளார்.

Father Kills Son Over Rs. 2,000 In Maharashtra

ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார் பிரோஸ். இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சம்சுல் வீட்டில் இருந்த சுத்தியலால் பிரோசின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த பிரோஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த நாசிக் போலீசார், தலைமறைவாக உள்ள சம்சுலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+