திருமணத்துக்கு தயாரான எக்ஸ் காதலி.. ஆத்திரத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை.. உபியில் பயங்கரம்
லக்னோ: தனது முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்து கொண்ட 4 குழந்தைகளுக்கு தந்தையான நபர் ஒருவர், அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காதலன் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதே மாநிலம், மாவ் மாவட்டத்தில் கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இந்தப் பெண்ணுக்கு வரும் மே 27 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மே 23 ஆம் தேதி பொட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக அந்தப் பெண் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதில், நிலைகுலைந்த அப்பெண் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தோள் பகுதி என 60 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசம்கார் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது மர்ம நபரில் ஒருவர், நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்காமல் செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டியதாக போலீஸாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் இச்சம்பவத்தில் அப்பெண்ணின் முன்னாள் காதலர் ராம் ஜனம் சிங் பட்டேல் என்பவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ராம் ஜனம் சிங் பட்டேலுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. ஆனால், ராம் ஜனம் சட்ட விரோதமாக இந்த இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேறொரு நபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படவுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த ராம் ஜனம் இந்த கொடூர ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ராம் ஜனம் மற்றும் மனோஜ் யாதவ், சுரேந்திரா யாதவ் ஆகிய மூன்று பேர் ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications