மறந்துடாதீங்க.. இந்த 4 நிதி சார்ந்த வேலைகளுக்கு டிச.31 தான் கடைசி தேதி... விவரங்கள்
டெல்லி: 2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் நிதி சம்பந்தமான நான்கு முக்கிய பணிகளை முடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் 2020ம் ஆண்டுக்கானநிதி சார்ந்த உங்கள் திட்டமிடலுக்கு சிக்கலாகி விடும்.
டிசம்பர் 31 அன்றுக்குள் முடிக்க வேண்டிய பணம் தொடர்பான நான்கு காலக்கெடுக்கள் உள்ளன.
இந்த நான்கு காலக்கெடுக்கள் என்ன, பணிகளை முடிக்காததால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

31ம்தேதி கடைசி தேதி
உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைத்துவிடுங்கள். டிசம்பர் 31 க்குப் பிறகு இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது. ஏப்ரல் 1, 2019 முதல், வருமான வரித் துறை ஆதார் உடன் பான் இணைப்பதை கட்டாயமாக்கியது. குறிப்பாக வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யும்போது, அவசியம். ஆதார் இணைக்கும் காலக்கெடு ஏற்கனவே செப்டம்பர் 30 முதல் 2019 இல் இருந்து பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் வரும் டிசம்பர் 31 தான் கடைசி நீட்டிப்பு என்று சொல்லப்படுகிறது. எனவே பான் கார்டை காப்பாற்ற ஆதார் உடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.

5000 அபராதம்
உங்கள் வருமானம் குறித்த கணக்கை (ITR) இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்துவிடுங்கள். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்காக ரூ.5000அபாரதம் செலுத்த வேணடும். ஒருவேளை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்யாமல் ஜனவரியிலோ அல்லது அடுத்த 3 மாதத்திற்குள்ளோ தாக்கல் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஈ.எம்.வி சிப் அட்டை
உங்களிடம் இன்னும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) காந்தக் கோடு (magnetic stripe ) ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு இருந்தால், டிசம்பர் 31 த் தேதி உடடன் அது பயனற்றதாகிவிடும், அதாவது வங்கிகள் அதை செயலிழக்கச் செய்வார். எனவே நீங்கள் அதை ஈ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான அட்டையாக மாற்ற வேண்டும். அப்போது தான் உங்கள் ஏடிஎம் அட்டையும் செல்லுபடியாகும். புதிய ஈ.எம்.வி சிப் அடிப்படையிலான டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை அதைப் பெறாதவர்கள் உடனே அவர்கள் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ கிளைக்கு செல்ல வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்கள்
வடகிழக்கு மாநிலங்களுக்கு 2019-20 நிதியாண்டிற்கான மூன்றாம் தவணை அட்வான்ஸ் வரியை செலுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நீட்டித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக , அதன் தேதியை டிசம்பர் 15, 2019 இருந்து டிசம்பர் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications