மோடியை விமர்சிக்கும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம்: பீகார் பாஜக தலைவர் வெறிப் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம் என பீகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீளும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம் என பீகார் பாஜக தலைவர் நித்தியானந்த் ராய் எம்.பி. மிரட்டல் விடுத்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது கருத்துகளுக்கு எதிரானவர்களின் தலையை வெட்டி வந்தால் இத்தனை கோடி பரிசு; நாக்கை வெட்டினால் இத்தனை கோடி பரிசு என்பது பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் ஸ்டைல். தற்போது பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் நடிகை தீபிகாபடுகோனே, இயக்குநர் பன்சாலியின் தலைக்கு ரூ10 கோடி வரை விலை வைத்திருக்கிறது இந்துத்துவா கோஷ்டி.

Fingers raised at Modi will be chopped off, warns Bihar BJP chief Nityanand Rai

இந்நிலையில் பீகாரில் கானு மற்றும் வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியதாவது:

ஏழையின் மகனாக பிறந்து நாட்டின் உயரிய பதவியான பிரதமர் நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். அவருக்கு உரிய கவுரவத்தை நாம் ஒவ்வொருவரும் தர வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யாரேனும் விரல்களையோ கைகளையோ உய்டர்த்தினால் நாம் ஒன்றிணைந்து அவர்களது விரல்களையும் கைகளையும் உடைப்போம்... தேவைப்பட்டால் வெட்டி எறியவும் தயங்க வேண்டாம்.

இவ்வாறு நித்யானந்த் ராய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+