திருப்பதி மலைப்பாதையில் ஓடும் வேனில் திடீர் தீ: 12 பக்தர்கள் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் நேற்றிரவு வேன் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக 12 பக்தர்கள் உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியிலிருந்து நேற்று இரவு திருமலைக்கு ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வேனில் 12 பக்தர்கள் இருந்தனர்.

fire accident in pilgrims' van in Tirupathi hill road

திவ்யராமன் என்ற இடத்தின் அருகே வரும்போது அந்த வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனை டிரைவர் நிறுத்தினார். இதனையடுத்து வேனில் வந்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி தப்பித்தனர்.

அதற்குள் மலைப்பாதையில் இருந்த தேவஸ்தான பாதுகாப்பு சிப்பந்திகள் அது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வேனில் எரிந்த தீயை அணைத்து விபத்தை தவிர்த்தனர்.

பின்னர் அதில் வந்த 12 பக்தர்களும் வேறு வாகனத்தில் திருமலைக்கு வந்து சேர்ந்தனர். வேனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+