பெங்களூர் மான்யதா டெக் பார்க்கில் தீ விபத்து: ஊழியர்கள் அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மான்யதா டெக் பார்க்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரின் வடக்கு பகுதியான ஹெப்பால் அருகே உள்ளது மான்யதா டெக் பார்க். அந்த வளாகத்தில் பல்வேறு ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் லட்சக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
#Fire in #manyata #Bangalore a prominent IT tech park #mebp pic.twitter.com/eyyip5qGPj
— arugsg (@arugsg) January 5, 2016 இந்நிலையில் டெக் பார்க்கில் இருக்கும் கிரீன்ஹார்ட் எம்ஃபார் கட்டிடத்தில் இன்று மாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே அந்த கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்த சம்பவத்தால் டெக் பார்க் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications