சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சேம்பர் பிளாக்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் ஆர்.கே. ஜெயின் வழக்கறிஞர்கள் சேம்பர் பிளாக்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் 4 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சேத விவரங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தீ விபத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications