மும்பை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி; 2 படுகாயம்
மும்பை அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.2 பேர் காயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை அருகே பிவான்டியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவாண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து கல்யாண், தானே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் பணி வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications