நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று மதியம் 1.30 மணிக்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 212ல் தீ மூண்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

9 வண்டிகளில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். ஏ.சி.யால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிபத்தால் அந்த கட்டிடம் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீ விபத்து நடந்தபோது அதே கட்டிடத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டம் நடந்தது. தீ விபத்து சிறிய அளவில் ஏற்பட்டதால் கூட்டம் ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து நடந்தது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications