சசிகலாவின் வசதிகளை அம்பலப்படுத்திய காவல் அதிகாரி ரூபா... மகளிர் தினத்தில் என்ன செய்தார் தெரியுமா?
பெண்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு மகளிர் தினத்தில் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தன்னுடைய இசை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக புகார் கூறிய முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா மகளிர் தினத்தில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மகளிர் தினத்தில் என்னுடைய இசை வீடியோவை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரூபா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். 1965ல் வெளிவந்த மீனாகுமாரி, தர்மேந்திரா நடித்த காஜல் படத்தில் வரும் "தோரா மன் தர்பன் கேஹலாயே" பிரபல பாடலை பாடியுள்ளார்.
ரூபாவின் புகைப்படங்கள், செய்திகளில் வந்த வீடியோக்களை வைத்து இந்தப் பாடல் தொகுக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரத்தில் ஆடியோ பதிவு செய்யப்பட்டு 4 மணி நேரம் வீடியோ படப்பிடிப்பும் இதற்காக செய்யப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ளார். இது பெண்களின் நலனுக்காக இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாக ரூபா கூறியுள்ளார்.

ஏன் பாடல் வெளியீடு?
இந்தப் பாடலை ஏன் குறிப்பாக தேர்ந்தெடுத்தார் என்றும் ரூபா விளக்கம் அளித்துள்ளார். ஆளுமைத்திறன் பற்றி வெளிப்படையாக சொல்லும் இந்தப் பாடல் தனக்கு எப்போதுமே உந்துசக்தியாக இருப்பதாக ரூபா தெரிவித்துள்ளார்.

முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்த ரூபா
ரூபா முதன் முதலில் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது தர்வாட் எஸ்பியாக இருந்த போது மத்திய பிரதேச முதல்வர் உமா பாரதியை கைது செய்த போது தான். கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சசிகலாவின் சிறை வசதிகளை அம்பலப்படுத்தினார்
இதனைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிற்கு சலுகைகள் தரப்படுவதாக தைரியமாக சொன்னார். மேலும் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் இதற்காக லஞ்சம் வாங்கினார், இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயார் என்றும் ரூபா பகிரங்கமாக தெரிவித்தார்.
|
பல திறன் படைத்த ரூபா
தன்னுடைய இசை வீடியோ பற்றி கூறிய பெண்களுக்கு உதாரணமாக கூறிய ரூபா " உங்களுடைய அறிவு என்பது கண்ணாடி போன்றது. உங்கள் சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ அதுவே பிரதிபலிப்பை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார். இந்த இசையை பதிவு செய்திருப்பவர் ஆலென், இவர் பல கன்னட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையை தவிர்த்து ரூபா பரதநாட்டியம், கிளாசிக்கல் இசையும் கற்றிருக்கிறார். துப்பாக்கியை குறி பார்த்து துள்ளியமாக சுடுவதில் தேர்ச்சி பெற்றவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications