காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து.. கொடூரமாக பழி வாங்கிய தீவிரவாதிகள்.. நாடோடிகளை கொன்று வீசினர்
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் சடூரா பகுதியில் தீவிரவாதிகளால் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மன்சூர் அஹமத் கோஹ்லி மற்றும் மொஹத் காதிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே உறவினர்களாகும். பலியான இருவருமே பூஞ்சில் வசித்து வந்தவர்கள். டிரால் பகுதியில் நாடோடிகளாக சுற்றி திரிந்தனர்.

ஆகஸ்ட் 20 ம் தேதி இருவரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர், அதன் பின்னர் காவல்துறையினர் அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை போலீசார் டிரால் வனப்பகுதியில் இருந்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதுதொடர்பாக, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலைகளுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மோடி அரசு, 370 வது பிரிவின் கீழ், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக ஆகஸ்ட் 5ம் தேதி அறிவித்தது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில், சிறப்பு சலுகை ரத்துக்கு பிறகு, காஷ்மீர் மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதலாக, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தென் இந்தியாவில், தீவிரவாதிகள் ஊடுருவி, காஷ்மீர் விவகாரத்திற்கு பழி வாங்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், காஷ்மீரில் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications