நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- "இஸ்பாட்" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் முறைகேட்டு வழக்குகளில் முதல் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிபதி பரத் பராஷரைக் கொண்ட டெல்லி தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவற்றில் ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று. இதன் இயக்குநர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் வகை செய்துள்ள நிலையில் இருவருக்குமான தண்டனை வரும் 31-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டை உலுக்கிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications