நிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- "இஸ்பாட்" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் முறைகேட்டு வழக்குகளில் முதல் தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிபதி பரத் பராஷரைக் கொண்ட டெல்லி தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவற்றில் ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவனம் மீதான வழக்கும் ஒன்று. இதன் இயக்குநர்கள் ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் மீது தவறான தகவல்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிலக்கரித்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்கண்ட் இஸ்பாட் நிறுவன இயக்குநர்கள், ஆர்.எஸ்.ருங்டா, ஆர்.சி.ருங்டா ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் வகை செய்துள்ள நிலையில் இருவருக்குமான தண்டனை வரும் 31-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
நாட்டை உலுக்கிய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications