வறட்சியின் பிடியில் தவிக்கும் மகாராஷ்டிராவின் லத்தூருக்கு ராஜஸ்தானிலிருந்து ரயிலில் போன குடிநீர்!
லத்தூர்: மகாராஷ்டிராவில் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லத்தூர் பகுதிக்கு, மிராஜ் பகுதியில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
இதற்காக 10 ரயில் பெட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டு அவற்றில் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியிலிருந்து நீர் நிரப்பட்டு மிராஜ் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லத்தூர் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு பெட்டிகளும் 54,000 லிட்டர் அளவிற்கு தண்ணீர் நிரப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் நேற்று மாலை லத்தூர் சென்றடைந்தது. வரலாறு காணாத வறட்சியில் சிக்கியுள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

மீரஜ் நகரிலிருந்து:
ராஜஸ்தானின் கோடா நகரிலிருந்து 5 லட்சம் லிட்டர் தண்ணீரை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயில், மகாராஷ்டிராவின் மீரஜ் நகருக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து 10 வேகன் தண்ணீர் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் லத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாள்தோறும் இயக்கப்படும்:
இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் , சரக்கு ரயில் ராஜஸ்தானிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் தண்ணீர்ப் பஞ்சம்:
ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர் முறையாக சேமிக்கப்படும் என்றனர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு லத்தூர் மாவட்டம் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது.

வீழ்ச்சியடைந்த உணவு உற்பத்தி:
அதிகளவில் விவசாயம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. பெரும்பாலான அணைகள் வறண்டு காணப்படுவதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவு தானிய உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications