தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை- மோடியிடம் அதிமுக எம்.பிக்கள் மனு
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் மீது நள்ளிரவு, இலங்கை கடற்படையினர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து நாகை, காரைக்கால் மீனவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அதிமுக நாடாளுமன்ற தலைவர் வேணுகோபால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு #FishermanIssue #ADMK MPs Meet PM pic.twitter.com/3a4XeGBj8s
— Stephen (@SteveNews1) November 18, 2016
இதுபற்றி நாகை, காரைக்கால் கடலோர காவல் படையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கடலில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற படகு மீனவர்களும் அச்சத்தில் கரை திரும்பினர். பல ஆண்டுகளுக்கு பின் இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர்பாகவும், கச்சத்தீவை மீட்கவும் பிரதமர் மோடியிடம் அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரிலேயே பிரதமரை சந்தித்து மனு அளித்ததாக அதிமுக எம்.பி., தம்பித்துரை கூறினார்.












Click it and Unblock the Notifications