பட்ஜெட்டுக்கு நடுவே 5 நிமிடம் 'பிரேக்', உட்கார்ந்து கொண்டு வாசிப்பு- ஜேட்லி புதுமை
டெல்லி: பட்ஜெட் உரைக்கு ஐந்து நிமிடம் பிரேக் எடுத்துக்கொண்டதுடன், உட்கார்ந்த படி உரையை படித்தார் அருண் ஜெட்லி. இந்த வகையில் புதிய சாதனை படைத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் தற்போது 16 வது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்ற ஆரம்பித்தார். நின்று கொண்டே உரையாற்றிய அருண்ஜெட்லிக்கு உடல் சோர்வுற்றது. இதையடுத்து கொஞ்ச நேரம் பிரேக் எடுத்துக்கொள்ளட்டுமா என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பார்த்து ஜெட்லி கேட்க, அதற்கு அவரும் ஓ.கே. சொல்லி அவையை ஐந்து நிமிடம் ஒத்தி வைத்தார்.

11.45 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட அவை மீண்டும் 11.50க்கு தொடங்கியது. இதன்பிறகு நின்று கொண்டே பட்ஜெட் உரையை படிக்க முடியாமல் அமர்ந்தபடி படிக்க ஆரம்பித்தார் ஜெட்லி. நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பட்ஜெட் உரை பாதியில் நிறுத்தப்பட்டு பிரேக் எடுக்கப்பட்டது இதுதான் முதன்முறை. அதேபோல அமர்ந்தபடி உரையை வாசித்ததும் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெட்லி புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
இருப்பினும் பட்ஜெட் உரையை பாதியில் நிறுத்தியது, பலரையும் ஆச்சரியமூட்டியது. ஜெட்லியைவிட முதிய வயதினர் நிதி அமைச்சராக இருந்தபோதெல்லாம் இப்படி செய்ததில்லை என்ற கிசுகிசுக்கள் நாடாளுமன்றத்திற்குள் எதிரொலித்தன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications