ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் வெறியாட்டம்.. மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு.. 5 போலீஸ்காரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாஷெட்பூர் அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்டனர்.

தலைநகர், ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், சரைகெலா மாவட்டத்தில் ஒரு உள்ளூர் சந்தையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது திடீரென மாவோயிஸ்டுகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

Five policemen martyred in a Maoist attack at Jharkhand

மாவோயிஸ்டுகள், இரண்டு பேர் இருந்ததாகவும், தாக்குதலுக்கு பிறகு போலீசாரின் ஆயுதங்களை கொள்ளையடித்து தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற இடம் மேற்கு வங்காளம்-ஜார்கண்ட் எல்லைக்கு அருகே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில், ஜார்கண்டின் தும்கா மாவட்டத்தில், தல்தங்கல் வனப்பகுதியில், சஸ்ஸாத்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி) மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்.

மே 28 ம் தேதி, ஜார்கண்டின் சரைகெலாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒரு சிஆர்பிஎஃப் கமாண்டோ இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+