5 தமிழர்களும் நீரில் மூழ்கிதான் இறந்தனர், அடித்ததற்கான தடயங்கள் இல்லை.. மருத்துவர் விளக்கம்
கடப்பா ஏரியில் மூழ்கிதான் ஐந்து தமிழர்களும் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கடப்பா: 5 தமிழர்களும் ஏரியில் மூழ்கிதான் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர போலீசாரே அடித்துக்கொன்று 5 பேரின் உடல்களையும் ஏரியில் வீசியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை
இந்நிலையில் 5 பேரின் உடல்களும் ஆந்திர மாநிலம் கடப்பா அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

நீரில் மூழ்கிதான் இறந்தனர்
அப்போது 5 பேரும் நீரில் மூழ்கிதான் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் 5 பேரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

எந்த தடயமும் இல்லை
3 நாட்கள் நீரில் மூழ்கியிருந்ததால் உடல்கள் அழுகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடித்து துன்புறுத்தியதற்கான எந்த தடயங்களும் 5 பேரின் உடல்களிலும் இல்லை என்றும் மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

சேலத்தை சேர்ந்தவர்கள்
இந்நிலையில் உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரைச் சேர்ந்த முருகேசன், கீழ்ஆவாரை கருப்பணன் உடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய மூன்று பேரும் கருமந்துறையை சேர்ந்தவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications