5 தமிழர்களும் நீரில் மூழ்கிதான் இறந்தனர், அடித்ததற்கான தடயங்கள் இல்லை.. மருத்துவர் விளக்கம்
கடப்பா ஏரியில் மூழ்கிதான் ஐந்து தமிழர்களும் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கடப்பா: 5 தமிழர்களும் ஏரியில் மூழ்கிதான் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர போலீசாரே அடித்துக்கொன்று 5 பேரின் உடல்களையும் ஏரியில் வீசியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை
இந்நிலையில் 5 பேரின் உடல்களும் ஆந்திர மாநிலம் கடப்பா அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

நீரில் மூழ்கிதான் இறந்தனர்
அப்போது 5 பேரும் நீரில் மூழ்கிதான் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் 5 பேரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

எந்த தடயமும் இல்லை
3 நாட்கள் நீரில் மூழ்கியிருந்ததால் உடல்கள் அழுகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடித்து துன்புறுத்தியதற்கான எந்த தடயங்களும் 5 பேரின் உடல்களிலும் இல்லை என்றும் மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

சேலத்தை சேர்ந்தவர்கள்
இந்நிலையில் உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரைச் சேர்ந்த முருகேசன், கீழ்ஆவாரை கருப்பணன் உடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய மூன்று பேரும் கருமந்துறையை சேர்ந்தவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications