குஜராத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது சிறுவன்
அகமதாபாத்: குஜராத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபதாத்தில் உள்ள சோலா பாலம் அருகே வசித்த 5 வயது சிறுமி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாயமானார். அவரை அவர்களின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டு வந்த ஜெயின் டிராவல்ஸில் பேருந்து கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை கொன்று தான் வேலை செய்யும் பேருந்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. சிறுமியின் கழுத்து, மார்பு பகுதியில் காயம் இருந்தது. அவரது உடல் கயிறால் கட்டப்பட்டிருந்தது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவன் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications