பாகிஸ்தானை இந்தியா வென்றது... வாகா எல்லையில் 360 அடி உயரத்தில் இந்திய கொடி பறக்குது
பாகிஸ்தான் ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னர் வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினர் 360 அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றினர்.
பஞ்சாப்: பாகிஸ்தான் 400 அடி உயர கொடியை ஏற்றுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய ராணுவத்தினர் 360 அடி உயர தேசியக் கொடியை வாகா எல்லையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றி அந்நாட்டை வெற்றி கண்டுள்ளனர்.
வாகா எல்லையில் இந்தியா கடந்த மார்ச் மாதம் இந்திய ராணுவத்தினர் கொடியேற்றினர். அப்போது பலத்த காற்று வீசியதால் சில நாள்களிலேயே நமது தேசியக் கொடி சேதமடைந்தது. இதனால் அந்தக் கொடியை வீரர்கள் மே மாதத்தில் அகற்றினர்.

கொடி மண்ணில் விழாமல்...
கொடி மண்ணில் விழாமல் இருக்கவும், காற்று, புயல் ஆகியவற்றை தாங்கும் வகையிலும் நிரந்தர தீர்வு காணும் வரை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று நமது வீரர்கள் முடிவு செய்திருந்தனர். அதேபோல் பாகிஸ்தான் நாட்டு கொடியும் அந்த பலத்த காற்றில் சேதமடைந்தது. எனினும் பாகிஸ்தான் கொடியை தயார் செய்யும் பணிகளை அந்நாட்டினர் தொடங்கினர்.

360 அடி உயரம்
பாகிஸ்தான் நாட்டுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் 400 அடி உயரத்தில் தயார் செய்துள்ள கொடியை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஞாயிற்றுக்கிழமை (ஆக.13) 360 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை இந்திய ராணுவத்தினர் ஏற்றினர்.

16 வரை ஏற்றப்பட்டிருக்கும்
பாகிஸ்தானை முந்திச் சென்றது மூலம் கொடி ஏற்றிய விவகாரத்தில் இந்தியா வெற்றி கண்டதாகவே கருதப்படுகிறது. இந்தியா ஏற்றிய கொடி, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அல்ல என்பதால் வரும் 16-ஆம் தேதி வரை ஏற்றப்பட்டிருக்கும். கொடிக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வரை முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே இந்தியக் கொடி எல்லையில் ஏற்றப்படும்.

ரூ.3.50 கோடி செலவில்...
அட்டாரி-வாகா எல்லை பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 360 மீட்டர் உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசியக் கொடி கம்பம் இதுவாகும். கொடியானது 120 மீட்டர் நீளம், 80 மீட்டர் அகலம் என்பதை குறைத்து 90 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக மாற்றப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications