பிளாஷ்பேக் 2014: இந்தியாவை அலற வைத்த புலிகள்...!
டெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் மாணவர் ஒருவரைக் கடித்துக் கொன்றது, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல் போய் கண்ணாம்பூச்சி காட்டியது என இந்த வருடம் மக்களை ரொம்பவே கிலியடையச் செய்தன புலிகள்.
உயிரியல் பூங்காவிற்கு வரும் பெரும்பாலானவர்கள் பார்க்க விரும்புவது புலி, சிங்கம் போன்ற மிருகங்களைத் தான். ஊர் ஊராகச் சென்று சர்க்கஸில் புலி, சிங்கம் போன்றவைக் காட்டப் படுவது தடை செய்யப் பட்டதைத் தொடர்ந்து, உயிரியல் பூங்காக்களில் மட்டுமே அவற்றைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், இந்தாண்டு நடந்த கசப்பான சம்பவங்கள் சிலவற்றால் புலியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது என்றால் மறுக்க இயலாது.

டெல்லி சம்பவம்:
டெல்லி உயிரியல் பூங்காவில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி யாரும் எதிர்பாராத நேரத்தில் புலி வசித்த பகுதிக்குள் தவறி விழுந்தார் மாணவர் ஒருவர். சுற்றி நின்றவர்கள் அனைவரும் கூச்சலிட அதுவரை அமைதி காத்த புலி, அம்மாணவனைக் கடித்து தூக்கிச் சென்று கொன்றது.

கூச்சலே காரணம்...
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இச்சம்பவம். பூங்காவில் பாதுகாப்பாளர்களால் பராமரிக்கப் பட்டு வந்த அந்த வெள்ளைப் புலி மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றவே மாணவரைக் கடித்ததாகக் கூறப்பட்டது.

மனநிலை ஆய்வு...
பின்னர், வெள்ளைப் புலியின் மனநிலை குறித்து சோதனைகள் செய்யப்பட்டு, அது நலமாக இருப்பதாகக் கூறப்பட்டது. மாணவரைக் கொன்ற வெள்ளைப் புலியை கொல்ல வேண்டும் என்றும், இல்லை வேண்டாம் என்றும் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப் பட்டன.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை...
சம்பவம் நடந்த மறுதினம் புலி விஜயைப் பார்ப்பதற்கு என்றே டெல்லி உயிரியல் பூங்காவிற்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் குவிந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களிலும் பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

தப்பிச் சென்ற புலிகள்...
இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே வண்டலூர் புலிகள் காணாமல் போய் பரபரப்பை உண்டாக்கின. கடந்த மாதம் பெய்த கனமழையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் வாழ்ந்து வந்த பகுதி தடுப்புச் சுவர் உடைந்தது. இதனால், அங்கிருந்த 5 புலிகள் வனப்பகுதிக்குள் தப்பியோடின.

போக்கு காட்டிய வித்யா...
பின்னர் மற்ற புலிகள் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி விட வித்யா என்ற புலி மட்டும் சில தினங்கள் அதிகாரிகளுக்கு போக்கு காட்டியது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும், பூங்காவின் சுற்றுப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தவர்களும் புலி பயத்தால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர்.

இறைச்சி ஆசையில் சிக்கியது...
வித்யா புலிக்காக பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டு கேமரா மூலம் அது கண்காணிக்கப் பட்டது. பின்னர் சில தினங்களுக்குப் பின்னர் கூண்டில் வைக்கப் பட்டிருந்த இறைச்சியை சாப்பிட வந்த புலி பூங்கா ஊழியர்களிடம் சிக்கியது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications