Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் சோகம்.. உலகை உறைய வைத்த நேபாள விமான விபத்து! இந்தியர்கள் உட்பட 68 பேரும் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அமைந்து உள்ளது போக்கரா சர்வதேச விமான நிலையம். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள், 4 விமான பணியாளர்களுடன் போக்கரா விமான நிலையத்துக்கு எட்டி ஏர்லைன்ஸ் புறப்பட்டது.

விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி சென்று ஓடி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆற்றின் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்கு உள்ளானது.

68 பேரும் பலி

68 பேரும் பலி

இந்த விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. முதலில் 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 45 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்தது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில், தற்போது 68 பயணிகளும் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 இந்தியர்கள்

5 இந்தியர்கள்

இந்த நிலையில் விமானத்தில் சென்ற 68 பயணிகளில் 53 பேர் நேபாளம் நாட்டின் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் ரஷிய குடிமக்கள் எனவும், 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் தலா ஒருவர் இதில் பயணித்ததாக போக்கரா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள். குறிப்பாக இதில் 2 குழந்தைகளும் அடக்கம்.

மீட்புக்குழுவினர்

மீட்புக்குழுவினர்

நேபாளம் சிவில் விமான போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா இதுகுறித்து பேசுகையில், "விபத்து நடத்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் சென்று உள்ளார்கள். விபத்து தொடர்பாக கூடுதல் விபரங்களை சேகரித்து வருகிறோம். மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன." என்று தெரிவித்தார்.

 நேபாள பிரதமர் பிரசண்டா

நேபாள பிரதமர் பிரசண்டா

விபத்து குறித்து தகவலறிந்தவுடன் நேபாளம் பிரதமர் பிரசண்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பொக்கரா விரையும் அவர், விபத்து நடந்த விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு உள்ளார். விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து போக்கரா விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

 விபத்துக்கான காரணம்?

விபத்துக்கான காரணம்?

இந்த விமான விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் நேபாளத்தில் அடர்ந்து பனி மூட்டம் நிலவியது விபத்துக்கு காரணமாக பார்க்கப்பட்டது. புகை மூட்டம் எழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தவுடன் இதற்கான உண்மை காரணம் தெரியவரும்.

 மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள்

மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள்

இதுகுறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி தெரிவிக்கையில், "விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் செட்டி என்ற ஆற்று பள்ளத்தாக்கில் விமானம் விபத்து உள்ளானது. 200 ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்ட ரேஞ்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+