பீகார், உ.பி, அசாமை சூழ்ந்த மழை வெள்ளம் - இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு - 500 பேர் பலி

பீகார், உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார், அசாம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

பீகாரில் மட்டும் 367 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் மழை வெள்ளத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்திலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

உத்தரபிரதேசத்தில் வெள்ளம்

உத்தரபிரதேசத்தில் வெள்ளம்

பல மாவட்டங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. 800 கிராமங்களை சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்க மாநிலமும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மால்டா மாவட்டத்தில் நிலைமை இன்னும் சீராகவில்லை. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் வெள்ளம்

பீகாரில் வெள்ளம்

பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர்.

367 பேர் பலி

367 பேர் பலி

இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி நாளை ஆய்வு

மோடி நாளை ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பீகார் வெள்ள சேதங்களை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார். இதன் பின்னர் இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிவாரண உதவி குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+