நாளை முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி.. பெரும்பான்மையை எப்போது நிரூபிக்கிறார் தெரியுமா?
Recommended Video

பெங்களூர்: நாளை மதியம் 2 மணியளவில் கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி, அடுத்த நாளே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம்.
37 உறுப்பினர்கள் பலம் கொண்ட (குமாரசாமி 2 தொகுதிகளில் வென்றுள்ளார்) மஜத மற்றும் 78 உறுப்பினர்கள் பலம் கொண்ட காங்கிரஸ் இணைந்து கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முன் வந்துள்ளன.

குமாரசாமி நாளை பகல் 2 மணியளவில் முதல்வராக பதவியேற்கிறார். கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில், மேற்கு வங்கம் உட்பட பல மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆளுநர் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ள போதிலும், நாளை மறுநாளே குமாரசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளாராம்.
2 துணை முதல்வர் பதவி தேவை என காங்கிரஸ் வலியுறுத்தும் நிலையில், மஜதவோ ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஓகே என்கிறது. இதனால் இழுபறி நீடித்த நிலையில், சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு வழங்க மஜத ஒப்புக்கொண்டுள்ளதால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் சுமூகமாக முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications