நகைக்கடை வர்த்தகர்கள் போராட்டம் வீண்.. தங்கநகை மீதான கலால் வரியில் மாற்றம் இல்லை: ஜெட்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தங்க நகை‌ உற்பத்தி விலை மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தங்க நகை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தியபோதிலும், மத்திய அரசு அதற்கு பணிய மறுத்துவிட்டது.

2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தங்க நகைகள் மீது 1% கலால் வரி விதிக்கப்படுவதாக, அறிவித்தார்.

FM Arun Jaitley rules out withdrawal of 1 per cent excise duty on gold

இதை திரும்பப் பெறக் கோரி, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் தங்க நகை வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

சுமார் 2 வாரங்களுக்கு மேலாக நகை வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: தங்க நகைகள் மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், மத்திய அரசு நிர்ணயித்தபடி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கலால் வரியை ஜூலை 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+