தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை! எம்.பி. பதவியை இழந்தார்!
ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் தமது எம்.பி. பதவியை இழந்துள்ளார்.
1990களில் லாலு பிரசாத் முதல்வராக பதவி வகித்த காலத்தில் ரூ37.7 கோடிக்கு தீவன கொள்முதலில் முறைகேடு நடந்தது என்பது வழக்கு. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஊழல் வழக்கில் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 30ந் தேதி பீகார் முன்னாள் முதலமைச்சர்கள் லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும் லாலுபிரசாத் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை விதிப்பது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதிகபட்ச தண்டனை- சிபிஐ
இதைத் தொடர்ந்து இன்று காலை எத்தனை ஆண்டுகாலம் தண்டனை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் அதிகபட்சம் 7 ஆண்டுகால தண்டனை விதிக்க வாதிடப்பட்டது.
நோய்கள் இருக்கு.. குறைவான தண்டனை- லாலு
ஆனால் லாலு தரப்பிலோ ஏகப்பட்ட நோய்கள் அவருக்கு இருப்பதால் குறைந்த கால தண்டனை வழங்கக் கோரியிருந்தனர்.
5 ஆண்டு சிறை
இதைத் தொடர்ந்து வீடியோகான்பரன்ஸ் மூலம் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் ரூ25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு
இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவி இழப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெற்றால் எம்.பி. எம்.எல்.ஏ பதவி வகிக்க முடியாது. தற்போது லாலுவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் தமது லோக்சபா எம்.பி. பதவியை இழக்கிறார். அத்துடன் 6 ஆண்டுகாலத்துக்கு லாலு தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஏற்கெனவே ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூத் தமது பதவியை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications