ஒரு வாரத்தில் 4 பேரைக் கொன்ற புலியை மடக்கிப் பிடித்த வனத்துறை
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் 4 பேரை தாக்கிக் கொன்ற புலியை வனத்துறையினர் இன்று உயிருடன் பிடித்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹெச்.டி. கோட்டே தாலுகாவில் உள்ளது சிக்கபர்கி காடுகள். இந்த காட்டுப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் புலி தாக்கி 2 பேர் பலியாகினர். மேலும் கடந்த சனிக்கிழமை நாகர்ஹோலே காட்டுப்பகுதியில் ஒருவர் புலி தாக்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் பசப்பா(55) என்ற விவசாயி புலி தாக்கி நேற்று முன்தினம் மாலை பலியானார். பசப்பாவை கொன்ற புலி தான் சீகேவடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான செலுவா மற்றும் நதாதிஹாடியைச் சேர்ந்த பசவராஜ் ஆகியோரையும் கொன்றது என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த புலியை கண்டதும் சுட்டுக் கொல்ல கர்நாடக மாநில வனத் துறை அமைச்சர் ராமநாத் ராய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் 4 மனித உயிர்களை பறித்த அந்த புலி இன்று சிக்கபர்கி காட்டுப் பகுதிக்கு வந்தது. அதை பார்த்த வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்கம் ஊசி செலுத்தி புலியை பிடித்தனர்.
பிடிபட்ட புலி பன்னேர்கட்டா தேசிய விலங்கியல் பூங்காவில் விடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications