யு.பி.எஸ்.சி உறுப்பினராக டெல்லி முன்னாள் கமிஷனர் பஸ்சி நியமனம்! அரசின் அரவணைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக டெல்லி நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் தேசவிரோத செயல் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கைது செய்த விவகாரத்தின்போது, அடிக்கடி செய்தியில் அடிப்பட்ட பெயர் பி.எஸ்.பஸ்சி. டெல்லியின் கமிஷனராக பணியாற்றிய இவர் மீது இடதுசாரிகள் கோபத்தை கொட்டினர். கெஜ்ரிவாலுடனும் மோதல் போக்கு கடைபிடித்தார். இருப்பினும், பஸ்சியை மத்திய அரசு அரவணைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பஸ்சி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications