அரசியல், விளையாட்டு.. பன்முக திறமை கொண்ட 'மைசூர் மகாராஜா' உடையார் !
பெங்களூர்: மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார் விளையாட்டு மற்றும் அரசியல் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தவர்.
மைசூரை தலைநகராக கொண்டு கிபி 1399ஆம் ஆண்டு 1950ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்கள் உடையார் அரசர்கள். இந்த வம்சத்தில் நாடு விடுதலை அடைந்த பிறந்தவர் ஸ்ரீகண்ட தத்த் நரசிம்மராஜ உடையார்.
1974ஆம் ஆண்டு அவரது தந்தையார் காலமான பிறகு மைசூர் அரச குடும்பத்தின் வாரிசானார். அவர் தமது கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.

மைசூர் பல்கலை. கேப்டன்
மைசூர் பல்கலைக் கழகத்தின் கிரிக்கெட் அண்யின் கேப்டனாக விளையாடியவர் ஸ்ரீ கண்ட தத்த நரசிம்மராஜ உடையார்

4 முறை எம்.பி
அதேபோல் அரசியலில் மிகுந்த ஈடுபாட்டை காட்டினார் ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார். 1984, 1989 தேர்தல்களிலும் 1996, 1999 தேர்தல்களிலும் மைசூர் லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருமுறை தேர்தலில் தோல்வியையும் தழுவி இருக்கிறார்.

தசரா ஊர்வலங்களில்..
மைசூரில் நடைபெறும் தசரா ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றவை. அப்போது மைசூர் மகாராஜா குடும்பத்தினரை முன்னிறுத்தியே இந்த தசரா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

அரச தர்பார்..
மைசூர் தசரா திருவிழாவின் போது பழங்கால வழக்கப்படி 'பராக்.. பராக்' எல்லாம் கூறி அரச தர்பாரை மைசூர் மகாராஜா நடத்துவார். ஸ்ரீகண்ட தத்த நரசிம்மராஜ உடையார் காலத்திலும் மிகச் சிறப்பாக இவ்விழாக்கள் நடத்தப்பட்டன. இந்த தசரா திருவிழா காலத்தில் மைசூர் மகாராஜா யானை மீது அமர்ந்து வலம் வருவதும் வழக்கம்.

கிரிக்கெட் சங்கத்தில்
2007ஆம் ஆண்டு கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உடையார். ஆனால் 2010ஆம் ஆண்டு அவரை கும்ப்ளே அணி வீழ்த்தியது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் உடையார் தலைவரானார்.

கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக..
தான் வாழ்நாளில் உடையார் நேசித்ததில் ஒன்று கிரிக்கெட். அவர் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவே காலமாகியிருப்பது (வயது 60) குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications