சூதாட்டம் மட்டுமல்ல, பாலியல் தொழிலையும் சட்டப்பூர்வமாக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கலாம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
ஹைதராபாத்: விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரைத்ததைப் போல, பாலியல் தொழிலையும் சட்டப்பூர்வமாக்கலாம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை வைத்து நடைபெறும் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரை செய்ததற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்தன.
இந்நிலையில், சட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான சந்தோஷ் ஹெக்டே நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய சூழலில் விளையாட்டு என்பது சூதாட்டமாகிவிட்டது. இருந்தாலும், ஆங்காங்கே சட்டவிரோத சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை சட்டபூர்வமாக்கும்போது 75 சதவிகித சட்டவிரோதமான சூதாட்டங்கள் நின்றுவிடும். அதே நேரத்தில், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமா என்றால், ஆம் என்றே கூறுவேன். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி அந்த தொழிலில் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுத்தால் அது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தெரிவித்துள்ளார்.