காங்கிரஸில் இருந்து விலகிய என்.டி.ஆர். மகள் புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்தார்
டெல்லி: காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரும், என்.டி. ராமாராவின் மகளுமான புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி. ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் விசாகப்பட்டினம் எம்.பி.யாக இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்து நாடாளுமன்றத்தில் மசோதாவையும் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரந்தேஸ்வரி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

அவர் வரும் தேர்தலில் பாஜக சார்பில் விசாகபட்டினம் அல்லது விஜயவாடா தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சந்திரபாபு நாயுடுவுக்கும், புரந்தேஸ்வரிக்கும் ஒத்துப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications