For Daily Alerts
Just In
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 4 பாதுகாப்பு படையினர் பலி!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். வாக்குப் பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறவில்லை.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பிஜாபூரில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
English summary
Four jawans of the Central Reserve Police Force or the CRPF were reportedly killed in a Naxal ambush in Bijapur district of Chhattisgarh today.
Story first published: Wednesday, November 27, 2013, 15:57 [IST]