டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் விபத்து.. 4 பேர் பலி.. மாவோயிஸ்டுகள் வேலை?
சாப்ரா (பிஹார்): டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் பீகாரில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தின் பின்னணியில் மாவோயிஸ்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பீகாரில் நேற்று 24 மணி நேர பந்த் அறிவித்திருந்தனர் மாவோயிஸ்டுகள். இந்த நிலையில் டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ், பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள கோல்டன் கஞ்ச் ரயில் நிலையத்தை அடைந்தபோது தண்டவாளத்திலிருந்து தடம் மாறி கவிழ்ந்தது.
அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது நேரம் அதிகாலை 2 மணி. இதில் 4 பேர் பலியானார்கள். 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் நாச வேலை காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும், பலியானவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /><div id="vnVideoPlayerContent"></div><script>var vtn_player_type="vp";var ven_video_key="NTU4MjI0fHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="417";</script><script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventunoSmartPlayer.js"></script></center>
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும், பலியானவர்களுக்கு இரங்கலும் வெளியிட்டுள்ளார். தீவிரமாக புலனாய்வு செய்யப்பட வேண்டிய விபத்து இது என அவர் தெரிவித்துள்ளார்.
அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்: 06152-237807, 243409