For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெர்மிட் இல்லாமல் 'சரக்கு' வைத்திருந்த 4 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் குஜராத்தில் கைது!

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த 4 விமானிகளை அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

Four Pilots of SpiceJet arrested in Ahmedabad

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அகமதாபாத், பூஜ் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் உரிய அனுமதி பெற்று மதுபாட்டில்களை வாங்க முடியும்.

இந்நிலையில் அகமதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் மதுபாட்டில்களுடன் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானிகள் 4 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். தாங்கள் டெல்லியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக 4 பேரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் 4 பேரையும் அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
Four pilots of domestic airline Spice Jet were held in Ahmedabad with liquor by police. They were in uniform. Possession or consumption of liquor without permit is illegal in Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X