காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. இந்திய ராணுவம் அதிaரடி!

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் கெரன் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

Four terrorist killed by Indian Army in Jammu Kashmir while trying to crossing the border

ஸ்ரீநகரில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவலாம் என புலனாய்வுத்துறை இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்த பாதுகாப்பு படை வீரர்கள் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெரன் பகுதியில் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

இந்திய ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+