குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே?
டெல்லி: வரும் குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவை அழைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்கா அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரும் 2016-ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவை அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது ஹோலண்டேவை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார். வரும் டிசம்பர் மாதம் ஐ.நா. சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிலும் ஹோலண்டேவை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின் போது குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது.
குடியரசு தின விழாவில் ஹோலண்டே பங்கேற்றால் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் 4வது பிரான்ஸ் தலைவராவார். 1976 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் ஜேக்குஸ் சிராக், 1980ஆம் அண்டு அதிபர் வலேரி ஜிஸ்கார்ட் எஸ்டெயிங், 2008ஆம் ஆண்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி ஆகியோர் குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.
ஹோலண்டே மட்டுமின்றி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரில் ஒருவரை அழைப்பது தொடர்பாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications