வீட்டில் தனியாக இருந்த பெண் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து நகை, பணம் கொள்ளை
பெங்களூர்: பெங்களூரில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாப் பொடி ஸ்ப்ரேயை அடித்து நகை, பணத்தை திருடிக் கொண்டு சென்றுள்ளது.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள 6வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சம்பத். அவரின் மனைவி நாகலட்சுமி(50). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு சம்பத் வீட்டில் வேலை செய்யும் மகேஷுடன் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றார்.

வீட்டில் தனியாக இருந்த நாகலட்சுமி தலைவாசலில் ஏதோ சப்தம் கேட்டு வந்து கதவை திறந்து பார்த்தார். அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் சம்பத் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறினர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த நாகலட்சுமி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
அப்போது அந்த கும்பல் அவர் முகத்தில் மிளகாய்ப் பொடி ஸ்பேரேயை அடித்தது. வீட்டில் உள்ள நகை, பணத்தை அளிக்குமாறு அந்த கும்பல் நாகலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளது. அவர் கொடுக்க மறுத்ததும் அந்த கும்பல் வீட்டை சேதப்படுத்தி நகை, பணத்தை திருடியது.
அப்போது சம்பத் வீடு திரும்புவதை உணர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.












Click it and Unblock the Notifications