சித்தூரில் கோயில்களை குறிவைத்துத் திருடிய கொள்ளை கும்பல் கைது! - வீடியோ
கோயில்களை மட்டும் குறிவைத்து, அங்கிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைத் திருடி வந்த கொள்ளை கும்பலை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: கோயில்களைக் குறிவைத்து அங்கிருக்கும் தங்கம் வெள்ளிப் பொருட்களைத் திருடிய நான்குபேரை சித்தூர் காவல்துறை கைது செய்து, பொருட்களை மீட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்திருக்கிறது நான்கு பேர் கொண்டல் கும்பல். இவர்கள் சில மாதங்களாக இந்த திருட்டைத் தொடர்ந்து செய்துள்ளனர். அதனால் சந்தேகமடைந்த சித்தூர் போலீஸ் தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளது.

அப்போது சந்தேகத்துக்கிடமான நான்குபேரை காவல்துறையினர் கைது செய்து விசாரத்ததில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கோயில்களில் கொள்ளையடித்த தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்களும் பூஜை பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications