மே.வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவி- ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சட்ட பயிற்சி மாணவி தமது இணைய பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒரு குழு அமைத்தது.
அக்குழு, புகார் கூறிய மாணவியிடம் விசாரணை நடத்தியது. அம்மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி எனவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏ.கே. கங்குலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை விசாரணை கமிஷன் பெற்றது.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக நீதிபதி ஏ.கே. கங்குலி மறுத்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து நீதிபதி கங்குலி உடனே பதவி விலக வேண்டும் என்று அம்மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பின்னர் அவர் மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று திரிணாமுல் எம்.பி. கல்யான் பாணர்ஜி சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications