Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஎம்-ஐ பார்த்து காங்கிரஸ் கேட்கும் கேள்வி.. ஒரு மேட்டரை வைத்து போடும் மெகா பிளான்! ஒர்க்அவுட் ஆகுமா

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: அசாமில் கௌரவ் கோகோயின் "ஹிமந்தா யார்?" என்ற கேள்வி, அங்கு அரசியல் அரங்கில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது தந்தை தருண் கோகோயின் 2011ஆம் ஆண்டு புகழ்பெற்ற வியூகத்தை நினைவுபடுத்துகிறது. இன்றைய சூழலில், வெறும் அடையாள அரசியலை மட்டும் வைத்து கொண்டு ஆழமான அமைப்பு பலம் மற்றும் நிர்வாகத் திறனுடன் செயல்படும் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகோய் சமீபத்தில் கவுகாத்தியில் ஒரு பிரமாண்டமான கூட்டத்தில் பேசும்போது "ஹிமந்தா பிஸ்வா சர்மா யார்?" என்று கேட்டது, அசாமின் அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. இது ஒரு தற்செயலான சொற்றொடர் அல்ல; அவரது மறைந்த தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான தருண் கோகோயின் 2011ஆம் ஆண்டு புகழ்பெற்ற "பத்ருதீன் அஜ்மல் யார்?" என்ற கேள்வியை இது அப்படியே பிரதிபலித்தது. அந்தக் கேள்வி அன்றைய தேர்தல் களத்தை வடிவமைத்து, முக்கியத் தொகுதிகளில் காங்கிரஸின் பிடியை வலுப்படுத்த உதவியது.

Gaurav Gogoi s Who is Himanta Echoes Tarun Gogoi Can Congress Turns Assam Political Clock in 2026

அசாம் அரசியல்

அசாமின் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரும், வழக்கறிஞரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய், 2020 நவம்பர் 23 அன்று தனது 84 வயதில் காலமானார். கொரோனா பாதிப்பு மற்றும் அதற்கு பிந்தைய சிக்கல்களால் ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு காரணமாக, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவரது 2011ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளில், அசாமின் அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது.

இப்போது அவரது மகன் கௌரவ் கோகோய் அதேபோல ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.. இது காங்கிரஸின் தற்போதைய தேர்தல் உத்தியைக் காட்டுகிறது..

2011 தேர்தல்

2011 சட்டமன்றத் தேர்தலில், மௌலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான AIUDF வளர்ந்து வரும் சக்தியாக இருந்தபோது, அப்போதைய முதல்வர் தருண் கோகோயின், "பத்ருதீன் அஜ்மல் யார்?" என்ற கேள்வி வாக்காளர்களிடம் பரவலாக எதிரொலித்து, காங்கிரஸின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியது.

இது நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிளவுபடுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட அஜ்மலிடம் இருந்து கவனத்தைத் திசைதிருப்பியது. இதனால் அசாம் அரசியல் வரலாற்றில் இந்தக் கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி போனது. இந்த வரலாற்றுத் தொடர்பே கௌரவ் கோகோயின் "ஹிமந்தா யார்?" என்ற கேள்விக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இது பழைய அரசியல் வரலாற்றை அடிப்படையாக வைத்தே 2026 பிரச்சாரத்திற்குக் காங்கிரஸ் ரெடியாகி வருகிறது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

அதேநேரம் 2011ல் அஜ்மலைப் போல ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு புதிய நபர் அல்ல. அவர் அசாமின் தற்போதைய முதலமைச்சர், வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முக்கியப் புள்ளி, மாநிலத்தில் முக்கியமான தெரியும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இது அவரை அஜ்மலில் இருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு தலைவராக்குகிறது. அதேபோல, ஹிமந்தா ஒரு காலத்தில் காங்கிரஸின் மிகவும் திறமையான வியூகம் வகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், தருண் கோகோயின் நம்பிக்கைக்குரிய தளபதியாக, அசாமில் காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் ஹிமாந்தா சர்மா முக்கிய பங்காற்றினார். இருப்பினும், 2011இல் கோகோயின் மகன் கௌரவ் தீவிர அரசியலில் நுழைந்த பிறகு, ஹிமாந்திவின் முக்கியத்துவம் குறைந்தது. இதையடுத்து அப்போது காங்கிரஸில் இருந்த 78 எம்எல்ஏக்களில் 54 பேரின் ஆதரவுடன், கோகோய் சீனியருக்குப் பதிலாக முதல்வராக ஹிமந்தா முயன்றபோது, அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை.

Gaurav Gogoi s Who is Himanta Echoes Tarun Gogoi Can Congress Turns Assam Political Clock in 2026

ஏமாற்றம்

காங்கிரஸ் தலைமையின் மீதான அவரது ஏமாற்றத்திற்கு ஒரு சம்பவத்தைக் காரணமாகச் சொல்கிறார்கள். அதாவது 2010களின் மத்தியில் நடந்த ஒரு கூட்டத்தின்போது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களுடன் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்தார். அப்போது ராகுல் காந்தியின் செல்ல நாயான "பிடி" அந்த அறைக்குள் நுழைந்து, தலைவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த தட்டில் இருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்துச் சென்றது.

விருந்தினர்களுக்கு பிஸ்கட் வழங்கப்படுவதற்கு முன்பு அந்தத் தட்டு மாற்றப்படவில்லை என்று ஹிமந்தா கூறியிருக்கிறார். காங்கிரஸ் தலைமை எந்தளவுக்கு தனது தலைவர்களை மதித்தது என்பதற்கு இதை உதாரணமாகக் குறிப்பிட்டார் ஹிமாந்தா! 2024 தொடக்கத்தில் ஒரு வைரல் வீடியோ சர்ச்சைக்குப் பதிலளித்தபோதும், ஹிமந்தா இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காங்கிரஸ் மீது பாய்ச்சல்

அப்போது அவர் தனது ட்விட்டரில், "ராகுல் காந்தி மட்டுமல்ல, அந்த குடும்பத்தாலே அந்த பிஸ்கட்டை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு அஸ்ஸாமியன் மற்றும் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் அதைச் சாப்பிட மறுத்து, காங்கிரஸிலிருந்து விலகினேன்" என்றார். இந்த நிகழ்வு அப்போது ஒரு விவாதமாகவே மாறியிருந்தது.

2015இல் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது மாநிலத்தின் அரசியலை மாற்றியது. அதிருப்தியடைந்த சர்மா பாஜகவில் சேர்ந்து, அசாமில் மட்டுமல்லாது வடகிழக்கு முழுவதிலும் காங்கிரஸின் சரிவுக்குக் காரணமாக மாறினார். 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அசாமில் பாஜகவின் வெற்றிக்கு அவர் பிரதானக் காரணமாக இருந்தார். அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் மேகாலயாவில் பாஜக அரசுகளை அமைப்பதில் அவர் முக்கிய கருவியாக இருந்தார்.

வடகிழக்கு பாஜக முகம்

அங்கு பாஜக ஒரு நெருக்கடியைச் சந்தித்த போதெல்லாம், ஹிமந்தா தான் அதைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு முக்கிய தலைவராக உருவெடுத்தார்.. காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு, ஹிமந்தா பாஜகவின் முக்கிய தலைவராகச் சீக்கிரமே உயர்ந்தார், திறமையான பிராந்தியத் தலைவர்களில் ஒருவரானார். அவர் பாஜகவுக்குப் பல தேர்தல் வெற்றிகளை வாங்கி கொடுத்தார். 2021இல், அசாமில் பாஜகவை வழிநடத்தி, முதலமைச்சரானார்.

காங்கிரஸின் வியூகம் வகுப்பாளர் நிலையில் இருந்து பாஜகவின் தலைவராக மாறிய இந்த மாற்றம் அமைப்புரீதியானது மட்டுமல்ல, அடையாளப்பூர்வமானதுமாகும்: இது அசாமின் அரசியலில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறித்தது. எனவே, கௌரவ் கோகோயின் இந்தக் கேள்வி அங்கு அரசயிலில் ஒர்க் ஆவுட் ஆகுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

தருண் கோகோய்- கௌரவ் கோகோய்

தருண் கோகோயின் 2011 ஆம் ஆண்டு கேள்விக்கு, அவர் ஒரு முதலமைச்சராக இருந்ததும், மாநிலம் முழுவதும் ஆழமான செல்வாக்கு பெற்றிருந்ததும் கூடுதல் பலமாக அமைந்தன. அவரது வார்த்தைகள் அதிகாரப் பற்று, அமைப்புக் கட்டமைப்பு மற்றும் அரசியல் அடையாளத்தால் ஆதரிக்கப்பட்டன.

ஆனால், கௌரவ் கோகோய் இப்போது தான் அசாம் முழுவதும் மக்கள் மத்தியில் ஆதரவைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசமானவர் என்ற போதிலும் மக்களிடையே அவரது செல்வாக்கு இன்னும் அவரது தந்தை அளவுக்கு இல்லை.

2026ஆம் ஆண்டின் அசாம், 2011 அசாம் போல இல்லை. சமூக வலைத்தளங்கள், ஹைப்பர்-அணிதிரட்டல், அடையாள அரசியல் மற்றும் ஆளுமைப் பதிவுகள் இப்போது தேர்தல்களை வடிவமைக்கின்றன. இந்தச் சூழலில், அடையாளப் பிரதிநிதித்துவம் மட்டும் போதுமானதாக இருக்காது.

வல்லுநர்கள் சொல்வது

அரசியல் எதிர்ப்பாளர்கள் கௌரவின் விமர்சனத்தைத் தீவிரமாக மறுத்துள்ளனர். உதாரணமாக, "ஹிமந்தா பிஸ்வா சர்மா யார்?" என்ற கேள்விக்கு ஹிமந்தாவே பதிலளித்தார். தனது அசாமிய அடையாளத்தை வலியுறுத்தி, காங்கிரஸுக்கு சவால் விடுத்தார். ஹிமாந்தா இது குறித்து, "நான் என் பெற்றோரின் மகன், அசாமியன், அசாமின் மீது அன்பு கொண்டவன். காங்கிரஸ்காரர்கள் பத்ருதீன் அஜ்மல் போன்ற 'மியா' தலைவர்கள் யார் என்று கேட்க வேண்டும், என்னைப் போன்ற அசாமியனை அல்ல" என்று பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸின் விமர்சனங்களைப் புறக்கணிக்காமல் அதற்கு பதிலடி கொடுத்தது பாஜகவின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா சாதாரண ஒரு அரசியல் தலைவர் அல்ல. முன்னாள் தீவர மாணவர் சங்க தலைவராகவும், காட்டன் கல்லூரி மாணவர் சங்கத்தின் மூன்று முறை பொதுச் செயலாளராகவும் இருந்த அவர், AGPஐச் சேர்ந்த பிரஃபுல்ல குமார் மகந்தா மற்றும் காங்கிரஸ் தலைவர்களான ஹிதேஷ்வர் சைகியா, தருண் கோகோய் ஆகிய மூன்று அசாம் முதலமைச்சர்களால் தனிப்பட்ட முறையில் வழிகாட்டப்பட்டவர்.

இருப்பினும், இன்று அவர் AGP அல்லது காங்கிரஸ் சார்பாக முதலமைச்சராக இல்லை. 2015இல் அவர் கட்சி மாறிய பிறகு பாஜகவே அவருக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தது.

Gaurav Gogoi s Who is Himanta Echoes Tarun Gogoi Can Congress Turns Assam Political Clock in 2026

முக்கிய கேள்விகள்

இவை எல்லாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. 2011இல் அவரது தந்தை இந்தக் கேள்வியை முதன்முதலில் முன்வைத்தபோது அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு, கௌரவிடம் இப்போது இருக்கிறதா? பாரம்பரியமும் ஒற்றுமைகளும் உரையாடலுக்கு வழி வகுக்கலாம். ஆனால் அசாம் போன்ற கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் சூழலில், கள அமைப்பு, ஆளுமை, தெளிவான பிரச்சாரம் ஆகியவற்றுக்கு இவை ஒரு மாற்றாக அமைந்துவிடாது.

இதுபோன்ற கேள்விக்குத் தலைப்புச் செய்திகளை உருவாக்கினாலும், தேர்தலில் வெல்ல உதவாது. வாக்காளர்களை வெல்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த ஒரு நிலையான பிரச்சாரம் தேவை என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாழ்வாதாரம், வளர்ச்சி, கலாச்சார அடையாளம், ஆளுமை ஆகியவையே 2026 அசாம் தேர்தலில் விவாதமாக உருவெடுத்துள்ளது.

நிச்சயம் போதாது

எனவே, கௌரவ் கோகோயின் தனது தந்தையின் வழியில் கேள்விகளைக் கேட்பது, தலைப்புச் செய்திகளை உருவாக்கினாலும், இப்போது கள அரசியல் மாறிவிட்டது. ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நிராகரிக்கப்படக்கூடிய ஒரு போட்டியாளர் அல்ல. அவர் அசாமின் முதலமைச்சர்.. ஒரு வலுவான கட்சியை வழிநடத்தும் தலைவர்.

இந்தச் சூழலில், காங்கிரஸின் கேள்விக்கு ஒரு தெளிவு தேவை. அப்போதுதான் அசாமின் அரசியல் பாதையை மீண்டும் மாற்றுவதற்கான நம்பிக்கையை அது தக்கவைத்துக் கொள்ள முடியும். வரலாறு ஊக்கமளிக்கலாம், ஆனால் 2026 பிரச்சாரத்தின் முழுமையான வழிகாட்டியாக அது இருக்க முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+