உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் தற்கொலை செய்வேன்.. கவுரி லங்கேஷ் கொலைகாரன் மிரட்டல்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ள
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.
இதை ஆதாரமாக கொடுக்கும் பொருட்டு, அவர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. கே டி நவீன் குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இந்த மாதம் 16ம் தேதிக்குள், 30ம் தேதி வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கே டி நவீன் குமார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கூடாது என்று மாற்றி பேசி இருக்கிறான். அப்படி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் போலீஸ் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையை, ஒரு நபரின் அனுமதி இன்றி அவர் மீது நடத்த முடியாது என்பதால், போலீஸ் மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும். நவீன் குமாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications