உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் தற்கொலை செய்வேன்.. கவுரி லங்கேஷ் கொலைகாரன் மிரட்டல்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ள
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள கே டி நவீன் குமார், தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.
இதை ஆதாரமாக கொடுக்கும் பொருட்டு, அவர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. கே டி நவீன் குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இந்த மாதம் 16ம் தேதிக்குள், 30ம் தேதி வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கே டி நவீன் குமார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கூடாது என்று மாற்றி பேசி இருக்கிறான். அப்படி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் போலீஸ் இதில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையை, ஒரு நபரின் அனுமதி இன்றி அவர் மீது நடத்த முடியாது என்பதால், போலீஸ் மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும். நவீன் குமாரின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications