ரூபாய் நோட்டு விவகாரம்.. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலை காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 80 சதவீத ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. பல்வேறு தொழில்கள் முடங்கியதால் ஏராளமானோர் வேலை இழந்தனர்.
இந்நிலையில், பருவமழை பொய்த்தது மற்றும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், வனத்துறை, மீன்பிடி தொழிலின் வளர்ச்சி கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு 4.1 சதவீதமாக விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications