ரூபாய் நோட்டு விவகாரம்.. நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலை காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தால் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த 80 சதவீத ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதாக கூறப்படுகிறது. பல்வேறு தொழில்கள் முடங்கியதால் ஏராளமானோர் வேலை இழந்தனர்.
இந்நிலையில், பருவமழை பொய்த்தது மற்றும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஆகியவை காரணமாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமான துறைகள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், வனத்துறை, மீன்பிடி தொழிலின் வளர்ச்சி கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு 4.1 சதவீதமாக விரிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு












Click it and Unblock the Notifications