காதலியின் வீட்டு வாசலில் மனைவியை மானபங்கப்படுத்திய 'கஜினி' நடிகர் கைது
மும்பை: மும்பையில் தனது காதலியின் வீட்டு வாசலில் வைத்து மனைவியை மானபங்கப்படுத்திய இந்தி நடிகர் காலித் சித்திக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பர படங்களில் நடித்து வருபவர் காலித் சித்திக்கி(41). இந்தி கஜினி படத்தில் ஆமீர் கானின் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக நடித்தவர் காலித். காலிதும் அவரது மனைவி ராஹத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.
அவர்களின் மகனும், மகளும் காலிதுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். காலிதின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஹத் தனது குழந்தைகளை வார இறுதி நாட்களில் பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஹத் காலித் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பாவது,
எனது மகன் கடந்த வார இறுதி நாட்களில் என வீட்டிற்கு வந்தபோது அவனது உடல்நலம் சரியில்லை. அதனால் அவன் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை. நான் திங்கட்கிழமை குழந்தைகளை காலிதின் வீட்டில் விடச் சென்றபோது அவர் அங்கு இல்லை. அன்று இரவு அவரது கார் அவரின் காதலி வீட்டு வாசலில் நிற்பதை பார்த்தேன். அவருக்கு பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. இது நடந்தபோது இரவு 2 மணி ஆகும்.
மகனுக்கு உடல்நலம் சரியில்லாதபோது காதலி வீட்டிலா இருக்கிறீர்கள் என்று நான் அவரின் காதலி வீட்டு வாசலில் நின்று கத்தினேன். இதையடுத்து ஒரு மணிநேரம் கழித்து கீழே வந்தவர் எனது கழுத்தை நெறித்ததுடன், என்னை மானபங்கப்படுத்தினார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் காலை 6.30 மணிக்கு காலிதை கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியே விட்டனர். இது வழக்கமான கணவன், மனைவி சண்டை என்றும், அவரை தான் மானபங்கபடுத்தவில்லை என்றும் காலித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications